» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)
நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் இன்று முதல் கூடுதலாக ஒரு படுக்கை வசதி முன்பதிவு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு இரயில்வே செய்திக் குறிப்பில் "பயணிகளின் தேவையை முன்னிட்டு நாகர்கோவில் - கோவை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி முன்பதிவு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது. இக்கூடுதல் பெட்டி இணைப்பின் மூலம், காத்திருப்போர் பட்டியலில் உள்ள 72 பயணிகள் பயணிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் கால அட்டவணை:
நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயில்: நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயிலில் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 30, 2026 வரை இக்கூடுதல் படுக்கை வசதிப் பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டுச் சேவை வழங்கப்படும்.
கோவை - நாகர்கோவில் அதிவிரைவு ரயில்: மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயிலில் இந்த கூடுதல் பெட்டி இணைப்பு நடைமுறை ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை தொடரும் எனத் தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)








