» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:59:15 AM (IST)

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிகள் மற்றும் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள், திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் இப்பேருந்து நிலையத்தில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின், பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பாலகம் முன்பு காத்திருந்த பயணிகளிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துரையாடினார். அப்போது பயணிகளுக்குத் தேநீர் வாங்கித் தந்து, அவர்களுடன் அமர்ந்து பேருந்து வசதிகள் மற்றும் பேருந்து நிலையக் குறைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். மாநகராட்சி வளர்ச்சிக்குச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் இந்த விபரங்கள் சேகரிக்கப்பட்டன.
ஆய்வின்போது மாநகராட்சி கவுன்சிலர் வைதேகி, வட்டச் செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ராஜசேகர், ஹரிகணேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட மாநகராட்சிப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மயூரன்Jul 17, 2026 - 05:02:42 PM | Posted IP 104.2*****
கோழிக்கூடு போல் உள்ள புதிதாக கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, கடைகளை குறைத்து வைத்து பயணிகளுக்கு பிரயோஜனமாக பழைய பேருந்து நிலையம் போன்று ஒன்று கட்டியெழுப்ப வேண்டும்.
KumarJul 17, 2026 - 12:00:38 PM | Posted IP 162.1*****
சாலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய உத்திகளை உருவாக்கவும்
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)

தவெக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது: சட்டமன்றத்தில் மார்க்கண்டேயன் விமர்சனம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:18:42 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 55-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:12:51 PM (IST)

கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:49:28 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)









மக்கள்Jul 17, 2026 - 07:16:38 PM | Posted IP 104.2*****