» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஏ.டி.எம்: மேயர் திறந்து வைத்தார்!
வியாழன் 16, ஜூலை 2026 11:47:09 AM (IST)

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் புதிய ஏ.டி.எம். மையத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் புதிய ஏ.டி.எம். திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் எம். டி. வின்சென்ட் தலைமை தாங்கினார். நிர்வாகத் துணைத் தலைவர் ஆனந்த கணேசன் முன்னிலை வகிக்க, தூத்துக்குடி மண்டல மேலாளர் தரணிதரன் வரவேற்புரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி புதிய ஏ.டி.எம். மையத்தைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தின் செயல்பாட்டைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வங்கி கிளை மேலாளர்கள் இளங்கோவன், சேர்மன் கவாஸ்கர், நீதிராஜன், பாலாஜி குமார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஹரி கணேஷ், மேயரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், ஜேஸ்பர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரை மணி, வட்ட செயலாளர் ரவீந்திரன் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)








