» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!

ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)

MalaiPambthik.jpg

திங்கள்சந்தை உடையார்பள்ளம் அருகே உள்ள பெரியகுளத்தில் மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீளம் கொண்ட பிரமாண்ட மலைப்பாம்பைத் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாகப் பிடித்துச் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை உடையார்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் உள்ள பெரியகுளத்தில் மீன் பிடிப்பதற்காக வழக்கம் போல் வலையை விரித்துச் சென்றுள்ளார். பின்னர் குளத்திற்கு வந்து வலையை எடுத்துப் பார்த்தபோது, அதற்குள் ஏதோ ஒரு பெரிய உருவம் சிக்குண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

நெருங்கிச் சென்று பார்த்தபோது, மீன்களுக்குப் பதிலாக சுமார் 7 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்று வலையிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர். பிடிபட்ட 7 அடி நீள மலைப்பாம்பு, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவிப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவத்தால் உடையார்பள்ளம் பெரியகுளப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory