» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டாஸ்மாக் அருகே சட்டவிரோத மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 5, ஜூலை 2026 11:21:36 AM (IST)
சாயர்புரம் தேரிரோடு டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 70 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் தேரிரோடு டாஸ்மாக் கடைக்கு அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் மது பாட்டில்கள் பதுக்கப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சட்டவிரோத மது விற்பனைக்காகப் பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்த ஒருவரைப் போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர், சாயர்புரம் அருகே உள்ள கூடம்புளி, சாமிகோவில் தெருவைச் சேர்ந்த வேல்துரை மகன் பெருமாள் (35) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் பெருமாளைக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 70 மது பாட்டில்களைக் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டுறவு வங்கியில் துணிகரக் கொள்ளை முயற்சி : லாக்கரை உடைக்க முடியாதால் நகை தப்பியது
ஞாயிறு 5, ஜூலை 2026 2:28:21 PM (IST)

தூத்துக்குடியில் வடமாநில வாலிபர் மர்ம மரணம் : போலீஸார் விசாரணை
ஞாயிறு 5, ஜூலை 2026 2:19:33 PM (IST)

தூத்துக்குடி ஆலயத்தில் நிதிமுறைகேடு புகார் : சபை மக்கள் ஆர்ப்பாட்டம்- பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 2:03:21 PM (IST)

மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)

லஞ்சமில்லா அரசை நடத்தும் ஜோசப் விஜய் அரசுக்கு நன்றி: தூத்துக்குடி காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:54:27 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
ஞாயிறு 5, ஜூலை 2026 11:35:30 AM (IST)








