» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது, 232 மது பாட்டில்கள் பறிமுதல்!

திங்கள் 22, ஜூன் 2026 8:08:20 PM (IST)



தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 232 மது பாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன!

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெவிஞ்சிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் லெவிஞ்சிபுரம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது, அங்குச் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பாத்திமா நகரைச் சேர்ந்த லிவிங்ஸ்டன் என்ற வில்லிங்டன் (36) மற்றும் மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த மரிய சூசை ராஜ் (36) ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 232 மது பாட்டில்கள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory