» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சொத்து தகராறில் மூதாட்டி மீது பொய் வழக்கு? ஆட்சித்தலைவரிடம் கருணை மனு!
திங்கள் 22, ஜூன் 2026 4:08:03 PM (IST)

கப்பிகுளத்தில் சொத்து தகராறில் தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று 80 வயது மூதாட்டி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
கப்பிகுளத்தில் சரஸ்வதி என்ற 80 வயது மூதாட்டி, தனியாக வசித்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் சேகர் என்பவர், சொத்துத் தகராறு காரணமாகத் தனது வீட்டிற்குள் புகுந்து, இடத்திற்குரிய கணினி பட்டாவை எடுத்துச் செல்ல முயன்றதாகவும், இதனைத் தடுத்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் தன்னைத் தாக்கியதாகவும், அதில் மயக்கமடைந்த தனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியையும் அவர் எடுத்துச் சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் போது அவசர உதவி எண்களான 100, 181 ஆகியவற்றிற்குத் தகவல் அளித்தும் உடனடி நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனப் புகார் தெரிவித்துள்ள அவர், பின்னர் ஊர் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்ந்து சுமார் 7 நாட்கள் சிகிச்சை பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தன்னைத் தாக்கிய சேகர் என்பவர், தனது கையை அவரே அறுத்துக் கொண்டு பசுவந்தனை காவல் நிலையத்தில் தன் மீது எதிர் புகார் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் தன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் சரஸ்வதி தெரிவித்துள்ளார். வயது மூப்பு காரணமாகச் சரியாக நடக்கக் கூட முடியாத நிலையில் உள்ள தன் மீது பதியப்பட்ட இந்த வழக்கைப் பொய் வழக்கு எனக்கூறி ரத்து செய்ய வேண்டும் என்றும், தாக்குதல் நடத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது, 232 மது பாட்டில்கள் பறிமுதல்!
திங்கள் 22, ஜூன் 2026 8:08:20 PM (IST)

பள்ளி, மதரஸா மாணவர்களுக்குப் பாராட்டு விழா!
திங்கள் 22, ஜூன் 2026 8:03:48 PM (IST)

வாலிபரை வெட்டிய நண்பருக்கு போலீசார் வலைவீச்சு!
திங்கள் 22, ஜூன் 2026 8:00:44 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 585 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 22, ஜூன் 2026 5:50:00 PM (IST)

கீழூர் ரயில் நிலையம் அருகே சாலை, பாதாள சாக்கடை மூடி சேதம் - சீரமைக்கக் கோரிக்கை!
திங்கள் 22, ஜூன் 2026 5:44:27 PM (IST)

அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை தொழில் மற்றும் கல்விக்கடன்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!
திங்கள் 22, ஜூன் 2026 4:17:41 PM (IST)








