» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபரை வெட்டிய நண்பருக்கு போலீசார் வலைவீச்சு!
திங்கள் 22, ஜூன் 2026 8:00:44 PM (IST)
குரும்பூர் அருகே முன் விரோதம் காரணமாக நண்பனை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நெட்டையன் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் சுரேந்தர் (26). இவருக்கும், இவருடைய நண்பரான சொக்கப்பழங்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த பிச்சை மகன் மாரிமுத்து (28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தெற்கு நல்லூரில் உள்ள குளக்கரையில் மாரிமுத்து தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேந்தர், மாரிமுத்துவிடம் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அந்த நேரத்தில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், மாரிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேந்தரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த சுரேந்தரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாகக் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மாரிமுத்துவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதில், காயமடைந்த சுரேந்தர் மற்றும் தப்பியோடிய மாரிமுத்து ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது, 232 மது பாட்டில்கள் பறிமுதல்!
திங்கள் 22, ஜூன் 2026 8:08:20 PM (IST)

பள்ளி, மதரஸா மாணவர்களுக்குப் பாராட்டு விழா!
திங்கள் 22, ஜூன் 2026 8:03:48 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 585 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 22, ஜூன் 2026 5:50:00 PM (IST)

கீழூர் ரயில் நிலையம் அருகே சாலை, பாதாள சாக்கடை மூடி சேதம் - சீரமைக்கக் கோரிக்கை!
திங்கள் 22, ஜூன் 2026 5:44:27 PM (IST)

அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை தொழில் மற்றும் கல்விக்கடன்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!
திங்கள் 22, ஜூன் 2026 4:17:41 PM (IST)

சொத்து தகராறில் மூதாட்டி மீது பொய் வழக்கு? ஆட்சித்தலைவரிடம் கருணை மனு!
திங்கள் 22, ஜூன் 2026 4:08:03 PM (IST)








