» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரை வெட்டிய நண்பருக்கு போலீசார் வலைவீச்சு!

திங்கள் 22, ஜூன் 2026 8:00:44 PM (IST)

குரும்பூர் அருகே முன் விரோதம் காரணமாக நண்பனை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நெட்டையன் காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் சுரேந்தர் (26). இவருக்கும், இவருடைய நண்பரான சொக்கப்பழங்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த பிச்சை மகன் மாரிமுத்து (28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தெற்கு நல்லூரில் உள்ள குளக்கரையில் மாரிமுத்து தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுரேந்தர், மாரிமுத்துவிடம் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அந்த நேரத்தில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், மாரிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேந்தரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த சுரேந்தரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாகக் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மாரிமுத்துவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதில், காயமடைந்த சுரேந்தர் மற்றும் தப்பியோடிய மாரிமுத்து ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory