» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 19, ஜூன் 2026 8:32:08 PM (IST)
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களைப் போலீசார் இன்று தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தூத்துக்குடி கே.வி.கே நகர் பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் சங்கர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் மதன்குமார் (32) ஆகிய இருவர் மீது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள் நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இவர்களின் தொடர் சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இவர்களைத் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பரிந்துரைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, சிப்காட் காவல் நிலைய போலீசார் இன்று சங்கர் மற்றும் மதன்குமார் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் முறைப்படி கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மீட் அன்ட் ஈட் புதிய கிளை: எஸ்பி சண்முகநாதன் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 19, ஜூன் 2026 9:51:52 PM (IST)

ராகுல் காந்தி பிறந்தநாள்: தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
வெள்ளி 19, ஜூன் 2026 9:49:29 PM (IST)

ஜூன் 21-ல் நீட் தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 2,015 மாணவர்கள் எழுதுகின்றனர்!
வெள்ளி 19, ஜூன் 2026 8:40:29 PM (IST)

தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை: நிர்வாகம் எச்சரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 5:53:18 PM (IST)

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் தேசிய வாசிப்பு தினம்: மாணவ, மாணவிகள் ஆர்வம்!
வெள்ளி 19, ஜூன் 2026 5:43:21 PM (IST)

போதையில் கார் ஓட்டி விபத்து: தூத்துக்குடி மாநகராட்சி சஸ்பெண்ட் அதிகாரி அதிரடி கைது!
வெள்ளி 19, ஜூன் 2026 5:02:07 PM (IST)









