» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு : இளைஞர் கைது - நகை பறிமுதல்!

வெள்ளி 15, மே 2026 4:32:12 PM (IST)



கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி (27.04.2026), ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தனலட்சுமி அணிந்திருந்த 6 பவுன் தாலிச் செயினைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குற்றவாளியைப் பிடிக்கத் துணைக் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், எஸ்ஐ ஸ்டீபன் மற்றும் இருப்புப் பாதை உட்கோட்ட குற்றப்பிரிவு எஸ்எஸ்ஐ அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய ஒரு இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், கடம்பூர் கீழப்பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் அழகுபாண்டி என்பது தெரியவந்தது. அவர்தான் தனலட்சுமியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து பறிக்கப்பட்ட 6 பவுன் தங்கச் சங்கிலியைப் போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட அழகுபாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory