» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காரில் புகையிலை பொருட்கள் பதுக்கல்: ஒருவர் கைது - கார் பறிமுதல்!

வியாழன் 14, மே 2026 3:18:04 PM (IST)

சூரங்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் நேற்று நெடுங்குளம் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கார் அருகில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருத்தவேல் (33) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் கருத்தவேலை கைது செய்து அவரிடமிருந்த 36 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரொக்கப் பணம் ரூபாய் 41,800/- மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory