» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி திருமணி ஆலயத்தில் சித்திரை திருவிழா

வியாழன் 14, மே 2026 3:06:07 PM (IST)



தூத்துக்குடி திருமணி ஆலயத்தில் 20-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்றது

தூத்துக்குடி மடத்தூர் சாலை, தபால் தந்தி காலனி 5-வது தெருவில் அமைந்துள்ள திருமணி ஆலயத்தில், 20-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு துளசி பெருமான், வருணியம்மன், ஆத்தி சுவாமி, ஆஞ்சநேயர் மற்றும் தசாவதார மூர்த்திகள் சன்னதிகளில் இந்த விழா நடைபெற்றது.

இதுகுறித்து தொல்லியல் ஆர்வலரும், ஆலய பூசாரியுமான பெ. ராஜேஷ் செல்வரதி அளித்துள்ள வரலாற்றுத் தகவல்கள் வருமாறு:    இவ்வாலயம் தென்பாண்டி மன்னர்களால் ஆளப்பட்ட ஐந்து நிலப்பரப்புகளான கழுகுமலை, எப்போதும் வென்றான், உடன்குடி, மேலப்புதுக்குடி மற்றும் நான்குநேரி ஆகிய பகுதிகளில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான உடன்குடி - செட்டியாபத்து "அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி" வழிபாட்டு முறையைச் சார்ந்தது.

'ஐந்து வீடு' என்பது பஞ்ச பாண்டவர்கள் ஐவரையோ, மேற்கூறிய ஐந்து நிலப்பரப்புகளையோ அல்லது வாசுதேவன், பலராமன், பிரதியும்னன், சம்பா, அனிருத்தன் ஆகிய ஐவரை உள்ளடக்கிய 'விருஷிணி' வழிபாட்டையோ குறிக்கும் அடையாளமாக இருக்கலாம் என்று தனது வரலாற்று ஆய்வின் அடிப்படையில் அவர் தெரிவித்தார். ஆலயத்தின் சித்திரை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பூசாரி பெ. ராஜேஷ் செல்வரதி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory