» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முத்துநகர் எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்

ஞாயிறு 10, மே 2026 12:27:59 PM (IST)

தூத்துக்குடியில் ரயில் தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 5:30 மணியளவில் தூத்துக்குடி வி.எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள தண்டவாளப் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென ரயிலின் முன் பாய்ந்துள்ளார். இதில் ரயிலில் அடிபட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ரயிலின் லோகோ பைலட் அளித்த தகவலின் பேரில், ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்தவர் சுமார் 50 மதிக்கத்தக்க ஆண். பெயர், முகவரி விபரம் தெரியவில்லை. மஞ்சள் மற்றும் சாம்பல் நிற கோடு போட்ட டீ-சர்ட் மற்றும் அரக்கு நிற பேண்ட் அணிந்திருந்தார். பலியான நபரின் உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால், அவரது அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தியும், இதுவரை அந்த நபர் யார் என்பது குறித்த விபரங்கள் கிடைக்கவில்லை. இது குறித்து ரயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர் யார்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory