» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ம.தி.மு.க.வின் 33-வது ஆண்டு தொடக்க விழா - கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டம்

புதன் 6, மே 2026 3:06:18 PM (IST)



தூத்துக்குடியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 33-வது ஆண்டு தொடக்க விழா, மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவிற்குத் தலைமை தாங்கிய தூத்துக்குடி மாநகரச் செயலாளர், கழகக் கொடியினை ஏற்றி வைத்துச் சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து, தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இவ்விழாவில் மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், மாநில வெளியீட்டு அணிச் செயலாளர் நக்கீரன், மாநகர அவைத்தலைவர் தொம்மை, மாநகரத் துணைச் செயலாளர் முருகேசன், ஒன்றியச் செயலாளர் செந்தூர் பாண்டி நிர்வாகிகள் முருகன், பொய்யாமொழி, ராமகிருஷ்ணன், துரை மகாராஜன் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory