» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: 3 பேர் கைது
புதன் 6, மே 2026 12:10:26 PM (IST)
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக மீனவரை கத்தியால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் கணபதி நகரைச் சேர்ந்தவர் வினோத் (32). மீனவரான இவருக்குத் திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை கடலுக்குச் சென்றுவிட்டு, மாலை 7 மணியளவில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மொட்டைக் கோபுரம் அருகே அவர் வந்துகொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளது.
பின்னர் அவர்கள் வினோத்தைச் சரமாரியாகத் தாக்கி, கத்தியால் குத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் பேரில், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில், இத்தாக்குதலில் ஈடுபட்டது திரேஸ்புரத்தைச் சேர்ந்த கென்னடி மகன் பிரசாந்த் (25), சுனாமி காலனியைச் சேர்ந்த மைக்கேல் மகன் ஜேம்ஸ் (25) மற்றும் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் சூசைய்யா (47) என்பது தெரியவந்தது.
இவர்களுக்கும் வினோத்தின் தம்பிக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் மூவரும் வினோத்தை தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லூரி மாணவியைக் கொலை செய்ய முயற்சி: வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
புதன் 6, மே 2026 5:20:49 PM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது!
புதன் 6, மே 2026 5:11:48 PM (IST)

த.வெ.க. பேனர் கிழிப்பு: அஜிதா ஆக்னலின் அண்ணன் கைது - தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 6, மே 2026 4:59:53 PM (IST)

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மீனவர் கைது
புதன் 6, மே 2026 4:05:03 PM (IST)

தூத்துக்குடியில் ம.தி.மு.க.வின் 33-வது ஆண்டு தொடக்க விழா - கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டம்
புதன் 6, மே 2026 3:06:18 PM (IST)

குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சுவையான ஸ்நாக்ஸ்!
புதன் 6, மே 2026 12:21:48 PM (IST)










