» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: 3 பேர் கைது

புதன் 6, மே 2026 12:10:26 PM (IST)

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக மீனவரை கத்தியால் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் கணபதி நகரைச் சேர்ந்தவர் வினோத் (32). மீனவரான இவருக்குத் திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை கடலுக்குச் சென்றுவிட்டு, மாலை 7 மணியளவில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மொட்டைக் கோபுரம் அருகே அவர் வந்துகொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளது.

பின்னர் அவர்கள் வினோத்தைச் சரமாரியாகத் தாக்கி, கத்தியால் குத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் பேரில், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். 

விசாரணையில், இத்தாக்குதலில் ஈடுபட்டது திரேஸ்புரத்தைச் சேர்ந்த  கென்னடி மகன் பிரசாந்த் (25), சுனாமி காலனியைச் சேர்ந்த மைக்கேல் மகன் ஜேம்ஸ் (25) மற்றும் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் சூசைய்யா (47) என்பது தெரியவந்தது.

இவர்களுக்கும் வினோத்தின் தம்பிக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் மூவரும் வினோத்தை தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory