» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு!

புதன் 6, மே 2026 8:48:47 AM (IST)

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் வீட்டின் படிக்கட்டில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் முத்துக்குமார் (41). இவர் விருதுநகர் மாவட்டம் நள்ளியில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.

கடந்த திங்கள்கிழமை அன்று தனது வீட்டிற்கு வந்திருந்த முத்துக்குமார், இரவு நேரத்தில் வீட்டின் மாடிக்குச் செல்வதற்காகப் படிக்கட்டில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகப் படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு உடனடியாகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் முத்துக்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory