» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மரம் அறுக்கும் இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு: வடமாநில தொழிலாளி காயம்!

புதன் 6, மே 2026 8:16:49 AM (IST)

கோவில்பட்டி அருகே உள்ள மரம் அறுக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த தெற்குத் திட்டங்குளம் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (58). இவர் வடக்கு திட்டங்குளத்தில் உள்ள மரம் அறுக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று பால்ராஜ் பணியில் இருந்தபோது, மரம் அறுக்கும் இயந்திரத்தில் திடீரென மின் கசிவு ஏற்பட்டது.

இயந்திரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் பால்ராஜ் மற்றும் அங்கிருந்த பீகாரைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளியான உபேந்திர மஞ்சி ஆகிய இருவரும் காயமடைந்தனர். உடனடியாகப் பால்ராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

காயமடைந்த மற்றொரு தொழிலாளி உபேந்திர மஞ்சி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்துக் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மரம் அறுக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் முருகனிடம் இது தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory