» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பார்சல் சேவைக்கு குறைந்த கட்டணம்; கூடுதல் பாதுகாப்பு: பொதுமக்களுக்கு அஞ்சல் துறை அழைப்பு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:52:48 PM (IST)
இந்திய அஞ்சல் துறை தனது பார்சல் சேவைகளை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தி வழங்குகிறது. இச்சேவைகளைப் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜி. செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் : வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில், பார்சல் சேவையில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பார்சல்களைப் பெறுபவரின் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்த்தல்.ரகசிய குறியீடு (OTP) அடிப்படையிலான விநியோக முறை.
வணிக நோக்கில் பார்சல்கள் அனுப்புவோருக்குத் தபால் நிலையத்திலிருந்து வந்து பெற்றுக்கொள்ளும் (Pickup) வசதி. இந்தியா முழுவதும் பார்சல்களை அனுப்ப ஒரே மாதிரியான கட்டண முறை பின்பற்றப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட பார்சல்களை இணையதளம் மூலம் எங்குள்ளது (Tracking) என்பதை எளிதாகக் கண்டறியலாம். இந்தியாவிற்குள் மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் பார்சல்களை அனுப்பும் வசதி உள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காகத் தலைமை அஞ்சலகங்களில் பிரத்யேகப் பார்சல் பேக்கிங் மையங்கள் செயல்படுகின்றன. அனைத்து கிளை அஞ்சலகங்களிலும் இச்சேவை கிடைக்கிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 9841875710 மற்றும் 9791655030 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்களைத் தொழில்முனைவோராக்கும் திட்டம் : தூத்துக்குடியில் 5 நாள் சிறப்புப் பயிற்சி முகாம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:48:35 PM (IST)

தூத்துக்குடி அருகே உப்பாற்று ஓடையில் முதியவர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:33:01 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு - போலீஸ் விசாரணை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 10:38:11 AM (IST)

தூத்துக்குடியில் மே 3-ஆம் தேதி 5 மையங்களில் நீட் தேர்வு: 1,968 பேர் எழுதுகின்றனர்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:41:01 AM (IST)

ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சித்திரை தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:34:44 AM (IST)

தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி தீவிரம்: டன் ரூ.1,300-ஆக விலை குறைந்தது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:28:45 AM (IST)








