» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சித்திரை தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்!

செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:34:44 AM (IST)



ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது.

நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு சுவாமி பொலிந்து நின்றபிரான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். கடந்த 23-ஆம் தேதி புகழ்பெற்ற கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் 9-ஆம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. காலை 4:30 மணிக்கு திருமஞ்சனம், 5 மணிக்கு கோஷ்டி நடைபெற்றது. பின்னர், காலை 6:25 மணிக்குள் சுவாமி பொலிந்து நின்றபிரான் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க திருத்தேரில் எழுந்தருளினார்.

காலை 8 மணியளவில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோபாலா’ என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் சித்திரை வீதியில் தொடங்கி தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து காலை 10:15 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory