» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே உப்பாற்று ஓடையில் முதியவர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:33:01 AM (IST)
தூத்துக்குடி அருகே உப்பாற்று ஓடையில் முதியவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பைபாஸ் பாலத்தின் கீழே உள்ள உப்பாற்று ஓடையில், இன்று முதியவர் ஒருவரின் சடலம் சகதியில் சிக்கிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்கோட்டை போலீசார், முதியவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த நபருக்கு சுமார் 75 வயது இருக்கும் எனத் தெரிகிறது. அவரது உடலில் காயங்கள் ஏதுமில்லை. தோற்றத்தைப் பார்க்கும்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? ஓடைக்குள் எப்படிச் சென்றார்? என்பது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்களைத் தொழில்முனைவோராக்கும் திட்டம் : தூத்துக்குடியில் 5 நாள் சிறப்புப் பயிற்சி முகாம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:48:35 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு - போலீஸ் விசாரணை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 10:38:11 AM (IST)

தூத்துக்குடியில் மே 3-ஆம் தேதி 5 மையங்களில் நீட் தேர்வு: 1,968 பேர் எழுதுகின்றனர்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:41:01 AM (IST)

ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சித்திரை தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:34:44 AM (IST)

தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி தீவிரம்: டன் ரூ.1,300-ஆக விலை குறைந்தது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:28:45 AM (IST)

திருச்செந்தூரில் தவெக தலைவர் விஜய் தரிசனம் : ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:14:27 AM (IST)








