» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே உப்பாற்று ஓடையில் முதியவர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:33:01 AM (IST)

தூத்துக்குடி அருகே உப்பாற்று ஓடையில் முதியவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பைபாஸ் பாலத்தின் கீழே உள்ள உப்பாற்று ஓடையில், இன்று முதியவர் ஒருவரின் சடலம் சகதியில் சிக்கிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்கோட்டை போலீசார், முதியவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த நபருக்கு சுமார் 75 வயது இருக்கும் எனத் தெரிகிறது. அவரது உடலில் காயங்கள் ஏதுமில்லை. தோற்றத்தைப் பார்க்கும்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? ஓடைக்குள் எப்படிச் சென்றார்? என்பது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory