» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபரை கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு - போலீஸ் விசாரணை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 10:38:11 AM (IST)
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவரை வழிமறித்துக் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பாரதி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் நேற்று இரவு சுமார் 9:30 மணியளவில், தினேஷ் தனது நண்பர் தேவராஜ் (26) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பிரையண்ட் நகர் 10-வது தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவர்களைப் பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், தினேஷின் வாகனத்தை வழிமறித்தனர். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி தினேஷை மிரட்டிய அந்த நபர்கள், அவரிடமிருந்த ரூ. 10,000 மதிப்புள்ள செல்போனைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட தினேஷ் இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அந்த இரு நபர்கள் யார்? அவர்கள் எந்த வாகனத்தில் வந்தார்கள்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்களைத் தொழில்முனைவோராக்கும் திட்டம் : தூத்துக்குடியில் 5 நாள் சிறப்புப் பயிற்சி முகாம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:48:35 PM (IST)

தூத்துக்குடி அருகே உப்பாற்று ஓடையில் முதியவர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:33:01 AM (IST)

தூத்துக்குடியில் மே 3-ஆம் தேதி 5 மையங்களில் நீட் தேர்வு: 1,968 பேர் எழுதுகின்றனர்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:41:01 AM (IST)

ஆதிநாதர் ஆழ்வார் கோவில் சித்திரை தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:34:44 AM (IST)

தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி தீவிரம்: டன் ரூ.1,300-ஆக விலை குறைந்தது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:28:45 AM (IST)

திருச்செந்தூரில் தவெக தலைவர் விஜய் தரிசனம் : ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:14:27 AM (IST)








