» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து பதுக்கல் : உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு!

ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:55:13 AM (IST)

கழுகுமுறை அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாகப் பட்டாசுகள் தயாரித்து பதுக்கி வைத்திருந்த குடோனில் போலீசார் சோதனை நடத்தி, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமுறை அருகே உள்ள கே.லட்சுமிபுரம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலிமுருகன் (38). இவருக்குச் சொந்தமான பழைய தீப்பெட்டி ஆலைக்குச் சொந்தமான குடோன் ஒன்று அப்பகுதியில் உள்ளது. இந்த குடோனில் சட்டத்திற்குப் புறம்பாகப் பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகக் கழுகுமுறை தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில், கழுகுமுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட குடோனில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, எவ்வித அரசு அனுமதியுமின்றி அங்குப் பேன்சி ரக பட்டாசுகள் மற்றும் வானவெடிகள் தயாரித்து விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, குடோனில் இருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப் பதிவு செய்துள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் சங்கிலிமுருகனை போலீசார் தேடி வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக உள்ள நிலையில், அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory