» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தடைக்காலத்தால் கிடுகிடுவென உயர்ந்த மீன் விலை: திரேஸ்புரம் துறைமுகத்தில் அலைமோதிய கூட்டம்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:11:03 AM (IST)
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாத நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை இன்று கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகுகளில் பெரும்பாலானவை போதிய மீன்கள் கிடைக்காததால் சனிக்கிழமை குறைந்த அளவிலான மீன்களுடனேயே கரை திரும்பின. இருப்பினும், தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் மீன்களை வாங்கத் திரேஸ்புரம் துறைமுகத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. வரத்து குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருந்ததால் மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.
அசைவப் பிரியர்களின் விருப்பமான வஞ்சிரம் எனப்படும் சீலா மீன் ஒரு கிலோ 1,300 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை விற்பனையானது. இதேபோல் நண்டு ஒரு கிலோ 900 ரூபாய்க்கும், விளை, ஊழி மற்றும் பாறை ஆகிய ரக மீன்கள் தலா 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.
சிறு வகை மீன்களான கிழவாலை, சூறை மற்றும் கேரை போன்றவை ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்பட்டன. சில்லறை விற்பனை தவிர்த்து கூடை கணக்கிலும் ஏலம் விடப்பட்டது; அதன்படி சாளை மீன் ஒரு கூடை 2,500 ரூபாய்க்கும், முண்டக்கண்ணி பாறை 2,000 ரூபாய்க்கும், வங்கனை மீன் 3,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்து மிகவும் குறைவாக இருந்த போதிலும், கோடை விடுமுறை காரணமாக பொதுமக்களின் தேவை அதிகரித்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
மீன்களின் வரத்து குறைவாக இருந்தபோதிலும், விலை உயர்ந்து காணப்பட்டதால் மீனவர்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அடைந்தனர். அதேசமயம், மீன்களின் விலை சாமானிய மக்களின் பட்ஜெட்டைத் தாண்டிச் சென்றது அசைவப் பிரியர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து பதுக்கல் : உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:55:13 AM (IST)

தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: நண்பர்கள் இருவர் கைது
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:26:04 AM (IST)

பைக் மீது கார் மோதி விபத்து: முதியவர் பரிதாப பலி!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:22:29 AM (IST)

தூத்துக்குடியில் பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து : பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:18:27 AM (IST)

மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறித்த வாலிபர் கைது!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:15:37 AM (IST)

நான் ஓட்டு போடுவேன் விழிப்புணர்வு குறும்படம் : ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டார்
சனி 18, ஏப்ரல் 2026 5:39:53 PM (IST)





