» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: நண்பர்கள் இருவர் கைது

ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:26:04 AM (IST)

தூத்துக்குடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஜே.ஜே. நகரைச் சேர்ந்தவர் தினேஷ் (24). இவரது நண்பர்கள் கொத்தனார் காலனியைச் சேர்ந்த கதிர்வேல் (24) மற்றும் பச்சைபெருமாள் என்ற அய்யனார் (21). கடந்த சில நாட்களுக்கு முன்பு, அய்யனார் தினேஷின் தங்கை குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை தினேஷ் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் நண்பர்களுக்கு இடையே மனக்கசப்பு இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தினேஷ், கதிர்வேல் மற்றும் அய்யனார் ஆகிய மூவரும் டி.சவேரியார்புரம் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கதிர்வேல் மற்றும் அய்யனார் ஆகிய இருவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தினேஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த தினேஷை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தினேஷ் அளித்த புகாரின் பேரில், தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த கதிர்வேல் மற்றும் அய்யனார் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





Thoothukudi Business Directory