» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலர் கைது – பணியிடை நீக்கம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 8:16:30 AM (IST)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு உதவியாக இருந்த இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட காவலர் கைது செய்யப்பட்டு, பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள தெற்கு காலாங்கரையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உதவியாக அவரது 28 வயது மனைவி உடனிருந்தார்.
அதே வார்டில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவருக்குப் பாதுகாப்புப் பணிக்காக, தட்டப்பாறை தெற்குத் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (36) என்ற காவலர் பணியமர்த்தப்பட்டிருந்தார். இவர் தற்போது சிப்காட் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று நள்ளிரவில், காவலர் கோபாலகிருஷ்ணன் அந்தப் பெண்ணிடம் சென்று அலைபேசி சார்ஜர் கேட்பது போலப் பேச்சு கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணிற்கு அவர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இது குறித்துப் புகார் அளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காவலர் கோபாலகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மீது: பாலியல் தொந்தரவு, பெண்ணைத் துன்புறுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதைக் கருத்தில் கொண்டு, அவர் நேற்று (திங்கள்கிழமை) முறைப்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி: அரசு ஊழியர்கள் தபால் வாக்குப்பதிவு!
புதன் 15, ஏப்ரல் 2026 4:03:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:32:23 PM (IST)

மனைவி, குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன்: தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:11:51 PM (IST)

குத்துவிளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்
புதன் 15, ஏப்ரல் 2026 12:44:33 PM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
புதன் 15, ஏப்ரல் 2026 11:49:49 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல் : 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!
புதன் 15, ஏப்ரல் 2026 10:41:22 AM (IST)







SeenivasagamApr 14, 2026 - 09:19:23 AM | Posted IP 172.7*****