» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி: அரசு ஊழியர்கள் தபால் வாக்குப்பதிவு!

புதன் 15, ஏப்ரல் 2026 4:03:33 PM (IST)



தூத்துக்குடியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026 பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அலுவலர்கள் ஆர்வத்துடன் தபால் வாக்குகளைச் செலுத்தினர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 9,000 அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

இவர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவு அலுவலர்கள் (நிலை 1, 2, 3) மற்றும் மண்டல அலுவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் குறித்து காணொலி காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. 

குறிப்பாக: மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) நடத்தும் முறை, வேட்பாளர்களின் முகவர்களிடம் பெற வேண்டிய படிவங்கள் மற்றும் கையொப்பங்கள், வாக்காளர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கும் முறை, வாக்குச்சாவடிக்குள் செல்போன் மற்றும் தேவையற்ற நபர்களை அனுமதிப்பதைத் தவிர்த்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்களைப் பாதுகாப்பான முறையில் சீல் வைப்பது. ஒவ்வொரு நடைமுறையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களைக் கொண்டு நேரடியாகச் செய்து காண்பிக்கப்பட்டது.

பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாக, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற தபால் வாக்கு செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தபால் வாக்கு செலுத்தச் சென்ற அலுவலர்களின் கைபேசிகள் பாதுகாப்பு கருதி நுழைவு வாயிலிலேயே வாங்கப்பட்டன.

அலுவலர்கள் வரிசையில் நின்று, ரகசியக் காப்பு அறையில் தங்களது வாக்கினைப் பதிவு செய்து, அதற்கென வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தினர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பணிகளில் முனைப்பு காட்டி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory