» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கச்சிகுடா - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்: ஜூன் 15 முதல் அமல்!

புதன் 15, ஏப்ரல் 2026 9:07:28 AM (IST)

தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலின் பயண நேரம் ஜூன் மாதம் முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது. 

ஐதராபாத் கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடந்த வாரம் முதல் புதிய வாராந்திர ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது இந்த ரயில் கச்சிகுடாவிலிருந்து மாலை 3:00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 10:30 மணிக்குத் தூத்துக்குடியை வந்தடைகிறது. இந்த ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, வரும் ஜூன் மாதம் 15-ஆம் தேதி முதல் புதிய நேர மாற்றம் அமலுக்கு வருகிறது.

அதன்படி, கச்சிகுடாவிலிருந்து மாலை 3:00 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் இரவு 10:30 மணிக்கு பதிலாக மாலை 7:15 மணிக்கே தூத்துக்குடி ரயில் நிலையத்தை வந்தடையும். இதன் மூலம் பயணிகள் சுமார் 3 மணி நேரம் முன்னதாகவே தங்களது இலக்கை அடைய முடியும்.

தூத்துக்குடிக்கு வரும் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ள நிலையில், இங்கிருந்து கச்சிகுடா செல்லும் ரயிலின் நேரத்தில் இதுவரை எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. தற்போது இந்த ரயில் தூத்துக்குடியிலிருந்து காலை 7:40 மணிக்குப் புறப்படுகிறது.

ரயில் நிலையத்திற்குப் பயணிகள் வந்து சேருவதற்கு வசதியாக, தூத்துக்குடியிலிருந்து புறப்படும் நேரத்தையும் 3 மணி நேரம் தாமதப்படுத்தி (சுமார் காலை 10:40 மணி அளவில்) இயக்க வேண்டும் எனப் பயணிகள் நலச் சங்கத்தினர் ரயில்வே நிர்வாகத்திற்கு விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory