» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி : ஆட்சியர் சுகுமார் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:33:47 PM (IST)

அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தினை திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026- வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, சட்டமன்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு வாக்காளர்களும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
18 வயது நிரம்பிய வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு போன்றவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றையதினம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.கே.புரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, அம்பாசமுத்திரம் ராணி மேல்நிலைப்பள்ளி, திருவள்ளுவர் கல்லூரியில் போன்ற இடங்களில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையத்தின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் இன்று (13.04.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வரிசை எண்கள் அமைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரிசைப்படுத்தி வைப்பதற்கான பணிகள் மற்றும் வாக்கு எண்ணும் அறைகளில் வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட ஏதுவாக பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பார்வையிட்டார்.
ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன், தேர்தல் வட்டாட்சியர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி: அரசு ஊழியர்கள் தபால் வாக்குப்பதிவு!
புதன் 15, ஏப்ரல் 2026 4:03:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:32:23 PM (IST)

மனைவி, குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன்: தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:11:51 PM (IST)

குத்துவிளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்
புதன் 15, ஏப்ரல் 2026 12:44:33 PM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
புதன் 15, ஏப்ரல் 2026 11:49:49 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல் : 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!
புதன் 15, ஏப்ரல் 2026 10:41:22 AM (IST)






