» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!

திங்கள் 6, ஏப்ரல் 2026 11:59:46 AM (IST)



தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன், இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

முன்னதாக, தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தேர்தல் அலுவலகம் முன்பிருந்து அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் ஊர்வலமாகப் புறப்பட்டார். இந்த ஊர்வலம் காய்கறி மார்க்கெட், மாநகராட்சி அலுவலகம், பழைய பேருந்து நிலையம், குருஸ் பர்ணாந்து சிலை, மார்த்தாண்டம்பட்டி, சத்திரம், சிவன் கோவில் மற்றும் பழைய மாநகராட்சி பிரதான சாலை வழியாகப் பழைய துறைமுகம் எதிரே உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது.

அங்கு, தூத்துக்குடி கோட்டாட்சியரும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரபு அவர்களிடம் சி.த. செல்லப்பாண்டியன் தனது வேட்புமனுவை வழங்கினார். அவருடன் பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், தொகுதிப் பொறுப்பாளர் சின்னத்துரை, முன்னாள் மேயர் சேவியர் மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் டேனியல் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஜோதிமணி, கே.டி.சி. பேச்சிமுத்து, சங்கர், வழக்கறிஞர் யூ.எஸ். சேகர், நடராஜன், முருகானந்தம், ஆசைத்தம்பி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ராதா, ஆனந்தராஜ், சண்முகத்தாய், அந்தோணி கிரேசி ஆகியோர் பங்கேற்றனர்.

பாஜக சார்பில் மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் தம்மு சுந்தரம், ஆன்மீகப் பிரிவுச் செயலாளர் உஷா தேவி, மாவட்டப் பொதுச்செயலாளர் ராஜேஷ், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் வெள்ளத்தாய் மற்றும் மண்டலத் தலைவர்கள் சுதா, ராஜேஷ் கனி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் லட்சுமணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டனர்.

காவல்துறையினருடன் வாக்குவாதம்:

முன்னதாக வேட்புமனுத் தாக்கல் செய்யும் அறைக்குள் வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற தேர்தல் ஆணையத்தின் விதிமுறை நடைமுறையில் உள்ளது. இருப்பினும், இதனை மீறி அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் இரா. ஹென்றி உள்ளே நுழைய முயன்றார். அவரைப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாகக் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory