» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீள பச்சைப் பாம்பு மீட்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:15:28 PM (IST)

தூத்துக்குடி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள பச்சைப் பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை நடுக்கூட்டுடன் காடு, மணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இன்று இவரது வீட்டின் முன்புறம் திடீரென ஒரு பாம்பு புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக இதுகுறித்து சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வேல்முருகன் வீட்டின் முன்புறம் இருந்த செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சுமார் 4 அடி நீளமுள்ள பச்சைப் பாம்பை வீரர்கள் லாவகமாகப் பிடித்தனர்.
பின்னர் மீட்கப்பட்ட அந்தப் பாம்பு, ஆள் நடமாட்டமில்லாத வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதிக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவி கொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி செல்போன் கடைகள் அடைப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:17:38 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:46:41 PM (IST)

தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை : ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு
செவ்வாய் 17, மார்ச் 2026 3:40:32 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
செவ்வாய் 17, மார்ச் 2026 3:23:13 PM (IST)

காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேட்பாளர் நேர்காணல்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:17:19 PM (IST)

ஸ்பிக் - கிரீன்ஸ்டார் உர தொழிற்சாலையில் 55-வது தேசிய பாதுகாப்பு வார விழா!
செவ்வாய் 17, மார்ச் 2026 12:33:07 PM (IST)








