» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை : ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு

செவ்வாய் 17, மார்ச் 2026 3:40:32 PM (IST)



தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர்  க. இளம்பகவத்  நேரில் ஆய்வு செய்தார். 

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர்  க. இளம்பகவத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் இன்று (மார்ச் 17, 2026) நேரில் ஆய்வு செய்தார்.

தேர்தல் தொடர்பான புகார்களைப் பெறவும், தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்காணிக்கவும் இந்த அறை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கி வருகிறது. பொதுமக்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் புகார்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்பது குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory