» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விடியா ஆட்சியை மக்கள் விரைவில் விரட்டியடிப்பார்கள்: கடம்பூர் செ. ராஜு கடும் தாக்கு!
செவ்வாய் 17, மார்ச் 2026 12:22:02 PM (IST)

திமுக ஆட்சியின் முடிவுதான் தமிழக மக்களுக்கு விடிவுகாலமாக அமையும் என தூத்துக்குடி ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பேசினார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. ஒரு அமைச்சர் 425 நாட்கள் சிறையில் இருந்தது இந்த ஆட்சிக்கு நேர்ந்த கேவலம். காவல்துறைக்குத் தலைமை தாங்கும் முதலமைச்சர் ஒரு 'பொம்மை முதலமைச்சராக' செயல்படுகிறார்.
தூத்துக்குடி பாலியல் சம்பவத்தில் குளத்தூர் போலீசார் முறையாகச் செயல்படவில்லை. மணிப்பூர் விவகாரத்தில் பேசிய எம்.பி., சொந்தத் தொகுதியில் நடந்த இச்சம்பவத்திற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை?பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத இந்த விடியா ஆட்சியை மக்கள் விரைவில் விரட்டியடிப்பார்கள். இந்த ஆட்சியின் முடிவுதான் தமிழக மக்களுக்கு விடிவுகாலமாக அமையும் என அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவி கொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி செல்போன் கடைகள் அடைப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:17:38 PM (IST)

வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீள பச்சைப் பாம்பு மீட்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:15:28 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:46:41 PM (IST)

தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை : ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு
செவ்வாய் 17, மார்ச் 2026 3:40:32 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
செவ்வாய் 17, மார்ச் 2026 3:23:13 PM (IST)

காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேட்பாளர் நேர்காணல்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:17:19 PM (IST)








