» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வேட்புமனு படிவங்களை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி: ஆட்சியர் இரா. சுகுமார் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:52:43 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் வேட்புமனு படிவங்களை தொகுதிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தொடங்கி வைத்தார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேவையான வேட்புமனு தாக்கல் தொடர்பான படிவங்களை அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா. சுகுமார் அவர்கள் இன்றுதொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து, மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி மற்றும் இராதாபுரம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தொடர்பான முக்கியப் படிவங்கள் தனி வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவம் 1 முதல் 7A வரை, தபால் வாக்குக்கான படிவங்கள் மற்றும் படிவம் 26, வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள், வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற பின் வழங்கப்படும் தேர்தல் சான்றிதழ் ஆகிய படிவங்கள் அந்தந்த தொகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டன.
இவை சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், மதுரை மற்றும் விருத்தாசலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு அச்சகங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு, தற்போது தொகுதி வாரியாகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அறையை ஆட்சியர் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினர் (Flying Squads), எந்தெந்தப் பகுதிகளில் உள்ளனர் என்பதை ஜி.பி.ஆர்.எஸ்கருவி மூலம் அகன்ற திரையில் கண்காணிக்கப்பட்டு வருவதை அவர் நேரில் பார்வையிட்டார்.
பங்கேற்ற அலுவலர்கள்:
இந்நிகழ்வில், பொறுப்பு அலுவலர் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை துணை ஆட்சியர் சிவகாம சுந்தரி, பயிற்சி துணை ஆட்சியர் செல்வி. கேரனோப்புக் லிதியா, உதவி பொறுப்பு அலுவலர் மாரிராஜா, பறக்கும்படை பொறுப்பு அலுவலர் இசக்கியப்பன், தேர்தல் வட்டாட்சியர் முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவி கொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி செல்போன் கடைகள் அடைப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:17:38 PM (IST)

வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீள பச்சைப் பாம்பு மீட்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:15:28 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:46:41 PM (IST)

தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை : ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு
செவ்வாய் 17, மார்ச் 2026 3:40:32 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
செவ்வாய் 17, மார்ச் 2026 3:23:13 PM (IST)

காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேட்பாளர் நேர்காணல்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:17:19 PM (IST)








