» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிலாஸ்பூர் - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்: கேரளாவின் சேர்த்தலாவில் கூடுதல் நிறுத்தம்
செவ்வாய் 17, மார்ச் 2026 10:24:55 AM (IST)
பிலாஸ்பூர் - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சேர்த்தலா ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மற்றும் தமிழகத்தின் திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில், பயணிகளின் வசதிக்காகக் கேரள மாநிலம் சேர்த்தலா ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த ரயிலானது சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரளா வழியாக இயக்கப்பட்டு வருகிறது. எர்ணாகுளம் - ஆலப்புழா ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள சேர்த்தலா நிலையத்தில் இனி கீழ்க்கண்ட நேரங்களில் நின்று செல்லும்:
வண்டி எண் 22619 (பிலாஸ்பூர் - நெல்லை): செவ்வாய்க்கிழமை பிலாஸ்பூரிலிருந்து புறப்படும் இந்த ரயில், புதன்கிழமை இரவு 8:24 மணிக்கு சேர்த்தலா வந்தடைந்து, 8:25 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.
வண்டி எண் 22620 (நெல்லை - பிலாஸ்பூர்): ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியிலிருந்து புறப்படும் இந்த ரயில், அன்று காலை 7:14 மணிக்கு சேர்த்தலா வந்தடைந்து, 7:15 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.
இது வரும் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தச் சோதனை அடிப்படையிலான நிறுத்தத்தை ரயில் பயணிகள் நல்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவி கொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி செல்போன் கடைகள் அடைப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:17:38 PM (IST)

வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீள பச்சைப் பாம்பு மீட்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:15:28 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:46:41 PM (IST)

தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை : ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு
செவ்வாய் 17, மார்ச் 2026 3:40:32 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
செவ்வாய் 17, மார்ச் 2026 3:23:13 PM (IST)

காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேட்பாளர் நேர்காணல்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:17:19 PM (IST)








