» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஈரானில் வேலைக்குச் சென்ற தூத்துக்குடி வாலிபர் மாயம் : மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் தந்தை மனு!
திங்கள் 16, மார்ச் 2026 12:46:25 PM (IST)

ஈரான் கப்பலில் வேலைக்குச் சென்ற தூத்துக்குடி வாலிபர் மாயமான நிலையில், அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஞானம் என்பவர் தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எனது மகன் ரோகான்ஸ் (20) கடந்த 7.5.2025 அன்று ஈரானுக்கு கப்பல் வேலைக்கு சென்றார். அங்கு நடுக்கடலில் நிற்கும் கப்பல்களுக்கு உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சப்ளை செய்யும் ஒரு கப்பலில் அவர் பணியாற்றி வந்தார்.
ஈரான் போர் தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்பாக அவர் எங்களிடம் பேசினார். அப்போது நாளை ஊருக்கு வருவதற்கு டிக்கெட் தருவதாக நிறுவனத்தினர் கூறி உள்ளனர் என தெரிவித்தார். அதற்குள் போர் தொடங்கிவிட்டது. அதன் பிறகு எங்கள் மகனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் தொடர்பு கொள்ளவில்லை. அவர் எங்கே இருக்கிறார். என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. எனவே எனது மகனை மீட்டு அழைத்துவர ஏற்பாடு செய்ய வேண்டும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவி கொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி செல்போன் கடைகள் அடைப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:17:38 PM (IST)

வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீள பச்சைப் பாம்பு மீட்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:15:28 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:46:41 PM (IST)

தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை : ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு
செவ்வாய் 17, மார்ச் 2026 3:40:32 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
செவ்வாய் 17, மார்ச் 2026 3:23:13 PM (IST)

காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேட்பாளர் நேர்காணல்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:17:19 PM (IST)








