» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:29:08 AM (IST)
தூத்துக்குடியில் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரைச் சேர்ந்தவர் கற்பகம் (44). லேசான மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் இவர், நேற்று மதியம் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு வந்துள்ளார். அவர் கடலில் இறங்கி குளிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக ஒரு ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்திலேயே அவர் நீரில் மூழ்கினார்.
தகவலறிந்த மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடலுக்குப் பிறகு கற்பகம் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக நன்மைக்காக ஸ்ரீசக்கரம் கோடி அர்ச்சனை : மேல்மருவத்தூர் பக்தர்கள் உலக சாதனை
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 7:25:48 PM (IST)

நெல்லை சரகத்தில் 23 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:31:50 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் சனிப் பெயர்ச்சி விழா நாளை தொடக்கம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:25:36 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு - மீன் சந்தையில் பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:13:22 AM (IST)

முதல்வர் ஸ்டாலின் 24ஆம் தேதி தூத்துக்குடி வருகை : திமுக சார்பில் உற்சாக வரவேற்பு!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:00:37 AM (IST)

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்க உயிரி வேலி: வனத்துறை நடவடிக்கை!
ஞாயிறு 22, பிப்ரவரி 2026 8:52:59 AM (IST)










