» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில் சனிப் பெயர்ச்சி விழா நாளை தொடக்கம்!

ஞாயிறு 22, பிப்ரவரி 2026 9:25:36 AM (IST)

நவகையாலயங்களில் சனி ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவிலில், சனிப் பெயர்ச்சி விழா நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

சனி பகவான் வருகிற 6-ஆம் தேதி காலை 7:37 மணிக்குக் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் காலை 7 மணி முதல் மகா நியாச ஜெபம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், ருத்ர ஹோமம் மற்றும் தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

விழாவின் முக்கிய நிகழ்வாக 6-ஆம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், காலை 7 மணிக்குச் சனீஸ்வர பகவானுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு ஒரு கோடி நாம ஜெப வழிபாடு மற்றும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் கோவல மணிகண்டன் மற்றும் ஆய்வாளர் நிசாந்தினி ஆகியோர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory