» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் முன் பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை : திருமணமான ஆறே நாட்களில் சோகம்!

ஞாயிறு 22, பிப்ரவரி 2026 8:26:41 AM (IST)

திருச்செந்தூர் அருகே திருமணமான ஆறே நாட்களில், புதுமாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி, ராஜமன்னியபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் இமானுவேல் எடிசன் (26). இவர் நாலுமாவடியில் உள்ள ஒரு தனியார் அச்சகத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி கோவில்பட்டியில் வைத்து திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆன நிலையில், நேற்று (சனிக்கிழமை) மாலை திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், அடைக்கலாபுரம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இமானுவேல் எடிசன் அந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி மகேஷ்குமார் மற்றும் ரயில்வே எஸ்.எஸ்.ஐ சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றினர். உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருமணமான சில நாட்களிலேயே வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory