» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்காச்சோளம் அறுவடைக்குச் சென்றபோது பன்றி கடித்து பெண் உட்பட 2 பேர் காயம்
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:21:19 AM (IST)
எட்டயபுரம் அருகே மக்காச்சோளம் அறுவடைக்குச் சென்ற பெண் உட்பட 2 பேரை பன்றி கடித்துக் காயப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா அயன்ராஜாபட்டி ஊராட்சி கைலாசபுரம் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் நேற்று காலை மக்காச்சோளம் அறுவடை பணி நடந்தது. அப்போது தோட்டத்திலிருந்து ஆக்ரோஷமாக ஓடிவந்த பன்றி ஒன்று, அறுவடை செய்துகொண்டிருந்த லட்சுமி மற்றும் நிலத்தின் உரிமையாளர் மூர்த்தி ஆகியோரைத் தாக்கி கடித்தது.
காயமடைந்த இருவரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள முட்செடிகளுக்குள் பன்றிகள் குட்டிகளுடன் சுற்றித் திரிவதாகவும், அவை அவ்வப்போது பயிர்களைச் சேதப்படுத்துவதோடு தொழிலாளர்களையும் கடித்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பான முறையில் அறுவடை நடைபெற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளம் தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் மாடசாமி வேட்புமனு தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:06:02 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி: அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:33:35 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:59:46 AM (IST)

ஓட்டப்பிடாரத்தில் தவெக வேட்பாளர் மதன் ராஜா வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:55:15 AM (IST)

ஆத்தூர் வெற்றிலை: வரலாற்று ஆவணக் குழுவின் விழிப்புணர்வுப் புத்தகம் வெளியீடு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:14:05 AM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி யாருக்கு? பலமுனை போட்டியால் வாக்குகள் சிதறும் நிலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:33:25 AM (IST)







