» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒர்க்ஷாப்பில் எலக்ட்ரிக் பொருட்களை திருடியவர் கைது
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:15:55 AM (IST)
கழுகுமலையில் கார் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப்பில் எலக்ட்ரிக் பொருட்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அண்ணா புதுத்தெருவைச் சேர்ந்த முத்துராமகிருஷ்ணன் (52) என்பவர் சங்கரன்கோவில் சாலையில் கார்கள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அவர் ஒர்க்ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். அன்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் ஒர்க்ஷாப்பின் பின்பக்கச் சுவரை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.
அங்கு இருந்த 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரிக் பொருட்களை அந்த நபர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். நேற்று கழுகுமலை பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த ஒரு நபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த கோமதிநாயகம் (56) என்பதும், அவரே ஒர்க்ஷாப்பில் திருடியவர் என்பதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளம் தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் மாடசாமி வேட்புமனு தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:06:02 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி: அமைச்சர் கீதா ஜீவன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:33:35 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:59:46 AM (IST)

ஓட்டப்பிடாரத்தில் தவெக வேட்பாளர் மதன் ராஜா வேட்புமனுத் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:55:15 AM (IST)

ஆத்தூர் வெற்றிலை: வரலாற்று ஆவணக் குழுவின் விழிப்புணர்வுப் புத்தகம் வெளியீடு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:14:05 AM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி யாருக்கு? பலமுனை போட்டியால் வாக்குகள் சிதறும் நிலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:33:25 AM (IST)







