» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 67 பேர் கைது!

வியாழன் 19, பிப்ரவரி 2026 8:13:11 AM (IST)

தமிழக அரசின் 2021 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு, கூட்டமைப்பு மாநிலத் துணை அமைப்பாளர் கனகவேல் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை முழங்கியபடி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து வந்த மத்தியபாகம் போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட ஒரு ஆண் உட்பட மொத்தம் 67 பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory