» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கார் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை!

வியாழன் 19, பிப்ரவரி 2026 7:52:58 AM (IST)

சாத்தான்குளம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கார் ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள செங்குளத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் ஆனந்தராஜ் (46). இவர், கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சசிரேகா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ஆனந்தராஜ் தனது தாயாரை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பான வழக்கு திருச்செந்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக ஊருக்கு வந்திருந்த ஆனந்தராஜ், மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனவேதனையடைந்த சசிரேகா, கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். 

ஆனந்தராஜ் பலமுறை அழைத்தும் அவர் மீண்டும் வர மறுத்ததாகத் தெரிகிறது. மனைவி வர மறுத்ததால் கடந்த சில நாட்களாக மிகுந்த விரக்தியில் இருந்த ஆனந்தராஜ், நேற்று இரவு போதையில் இருந்தபோது தனது உடலில் தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory