» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடுபுகுந்து இளம்பெண்ணுக்குக் கத்திக் குத்து: விஷம் குடித்த வியாபாரியால் பரபரப்பு

புதன் 18, பிப்ரவரி 2026 8:26:03 AM (IST)

கயத்தாறில் வீடுபுகுந்து இளம்பெண்ணை வியாபாரி கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கோட்டைப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிராஜின் மனைவி இசக்கியம்மாள் (25). இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் கோணி வியாபாரி மகாராஜன் (50) என்பவர், நேற்று மாலை மதுபோதையில் கத்தியுடன் இசக்கியம்மாள் வீட்டிற்குள் புகுந்து, அவரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த இசக்கியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு மக்கள் திரண்டதால், மகாராஜன் தனது வீட்டிற்கு ஓடிச் சென்று போலீசுக்குப் பயந்து அங்கிருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். படுகாயமடைந்த இசக்கியம்மாள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்; விஷம் குடித்த மகாராஜனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory