» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கயத்தாறு அருகே பாலத்தில் லாரி மோதி விபத்து: டிரைவர் பலி!
ஞாயிறு 9, மார்ச் 2025 10:22:11 AM (IST)
கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் நாற்கர சாலையில் உள்ள பாலத்தின் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு பலசரக்கு சாமான்களை ஏற்றிக் கொண்டு நெல்லையை நோக்கி வந்த லாரியை மதுரை கணக்கன்குளத்தை சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் குமார் (21) என்பவர் ஓட்டி வந்தார். அதிகாலை 3 மணியளவில் தளவாய்புரம் அருகே வரும் போது, பாலத்தின் திட்டில் எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் லாரியின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் லாரி டிரைவர் மனோஜ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த லாரி உரிமையாளர் கண்ணன் படுகாயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் சுதாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்கள் : தென்மண்டல ஐஜி துவக்கி வைத்தார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:29:50 PM (IST)

தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 3:12:43 PM (IST)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா: திருமண்டல மேலாளர் பங்கேற்பு!
திங்கள் 22, டிசம்பர் 2025 12:36:53 PM (IST)

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)










