» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கயத்தாறு அருகே பாலத்தில் லாரி மோதி விபத்து: டிரைவர் பலி!

ஞாயிறு 9, மார்ச் 2025 10:22:11 AM (IST)

கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் நாற்கர சாலையில் உள்ள பாலத்தின் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு பலசரக்கு சாமான்களை ஏற்றிக் கொண்டு நெல்லையை நோக்கி வந்த லாரியை மதுரை கணக்கன்குளத்தை சேர்ந்த லாரி டிரைவர் மனோஜ் குமார் (21) என்பவர் ஓட்டி வந்தார். அதிகாலை 3 மணியளவில் தளவாய்புரம் அருகே வரும் போது, பாலத்தின் திட்டில் எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் லாரியின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. 

இதில் லாரி டிரைவர் மனோஜ் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த லாரி உரிமையாளர் கண்ணன் படுகாயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் சுதாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory