» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆன்லைன் கடன் செயலி: பணம் கேட்டு மிரட்டியவர் கைது!

ஞாயிறு 9, மார்ச் 2025 10:18:36 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் செயலி மூலம் பெற்ற கடனை திருப்பி செலுத்திய பின்னரும் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் கடன் செயலி மூலம் கடனை பெற்று அதனை முழுவதும் செலுத்திவிட்டாராம். ஆனால் அந்த செயலியின் உரிமையாளர், கடன் பெற்றவரை தொடர்புகொண்டு மீண்டும் பணம் கட்ட வேண்டும், அவ்வாறு கட்டவில்லையெனில், அவரது குடும்பத்தினரின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில், தெற்கு டெல்லி, அயா நகரைச் சேர்ந்த சந்தேஷ்வர் மகன் தேவ்ஆனந்த் (20) என்பவர் கடன் தொகை கட்டக்கோரி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து தெற்கு டெல்லி சென்ற போலீசார் தேவ் ஆனந்தை கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory