» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடியில் 3பேர் கைது!

ஞாயிறு 9, மார்ச் 2025 9:30:49 AM (IST)



தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி தாளமுத்து வெள்ளப்பட்டி கடற்கரையில் இன்று கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இலங்கைக்கு படகுகள் மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 68 மூட்டை பீடி இலைகளை கைப்பற்றினர். 

இது தொடர்பாக சிலுவை பட்டி கணபதி நகர் தங்கசாமி மகன் மகேஷ் குமார் (28), தாளமுத்து நகர் எம்ஜிஆர் நகர் அருளப்பன் மகன் அருளப்பன் ஆண்டனி ஜோசப் (40), தங்கசாமி மகன் மாயாண்டி (38) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சரக்கு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் பயன்படுத்திய பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory