» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் : 2 போ் கைது

ஞாயிறு 9, மார்ச் 2025 9:29:56 AM (IST)



தூத்துக்குடியில் சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 500 கிலோ கடல் அட்டைகள், 2 ஆயிரம் லிட்டா் டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர் இது தொடர்பாக 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு கிடங்கில் சட்டவிரோதமான பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நகர காவல் உதவி கண்காணிப்பாளா் மதனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், தனிப்படை போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு சட்டவிரோதமாக கடல் அட்டைகள், டீசல் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

அங்கிருந்த பட்டினமருதூா் பகுதியைச் சோ்ந்த மொய்தீன் (40), திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த திலீப் (25) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து சுமாா் 500 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனா். மேலும், சுமாா் 2 ஆயிரம் லிட்டா் டீசலை பறிமுதல் செய்யப்பட்டு உணவு பாதுகாப்புக் குழு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory