» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்கள் சிவில் கழகத்தின் சார்பில் மகளிர் தின விழா

ஞாயிறு 9, மார்ச் 2025 9:18:35 AM (IST)



தூத்துக்குடியில் மக்கள் சிவில் ஒரு கழகத்தின் சார்பில் மகளிர் தின விழா அண்ணா நகர் தங்கம் நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாவட்ட தலைவர் ச. தெ.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினரும், சுற்றுப்புற சூழலியளாருமான பேராசிரியை பாத்திமா பாபு விழாவை ஒருங்கிணைத்தார். மாவட்ட செயலாளர் தெர்மல் ராஜா வரவேற்றார். 

விழாவில் மக்கள் சிவில் உரிமை கழக உறுப்பினரும் பள்ளியின் நிர்வாக குழு தலைவமான ஈஸ்டர் ராணி உட்பட ஆசிரியைகள் அனைவருக்கும் தமிழ் செம்மல், மக்கள் சிவில் உரிமை கழகத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் நெய்தல் ஆண்டோ எழுதிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் விக்னேஷ் புதல்வி தியாஸ்ரீ பெண்கள் உரிமைகளை பற்றி பாடல் பாடினார். 

விழாவில் மக்கள் சிவில் உரிமை கழகத்தின் உறுப்பினர்கள் மாஸ் தமிழ்ச்செல்வன், அந்தோணி, நவமணி தங்கராஜ், பூசைதுரை, கிதர் பிஸ்மி மற்றும் அவர்களது துணைவியார்கள், மற்றும் செபஸ்டியான், சம்சுதீன், கண்ணன், ராபின், இசக்கிமுத்து, உட்பட பலர் கலந்து காெண்டனர். தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் சம்சுதீன் நன்றி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory