» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்

ஞாயிறு 9, மார்ச் 2025 9:01:14 AM (IST)



நாசரேத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணி நிர்வாகிகள் 17பேரை போலீசார் கைது செய்தனர். 

திண்டுக்கல்லில் இந்து முன்னணி மாநில செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணியின் சார்பில் நாசரேத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் தலைமையில் மாவட்ட செயலாளர்  அருணாச்சலம் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்த், தாடிமுருகன், திருச்செந்தூர் நகர தலைவர் முத்துராஜ், நாசரேத் நகர தலைவர் ராஜசெல்வன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வரதன், ஓடை முருகேசன், சாத்தான்குளம் ஒன்றிய பொறுப்பாளர் கலியமுத்து, திருச்செந்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜு மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை நாசரேத் இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory