» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மகளிர் தின‌ விழா

சனி 8, மார்ச் 2025 8:10:56 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச மகளிர் தின‌ விழா கொண்டாடப்பட்டது. 

மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டுரை எழுதுதல்‌, கவிதை எழுதுதல் மற்றும் தமிழ் விவாதப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் மாணவர் சங்கத்தின் துணைத்தலைவர் (பொறுப்பு) வே. ராணி வரவேற்புரை வழங்கினார். அதை தொடர்ந்து, மூன்றாம் ஆண்டு மாணவி பு. சபி பிரிஷா மகளிர் தினச் சிறப்புக் கவிதை வாசித்தார். முதலாம் ஆண்டு மாணவி பெ. ஜெய ரஞ்சினி தமிழுரை ஆற்றினார்.

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சுவர்ணலதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நீ. நீதிசெல்வன் விழாவினை தலைமை தாங்கி தலைமையுரை வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன‌. நிறைவாக மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் செ.கு.மெய்வேந்தன் நன்றியுரை வழங்கினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory